என் மீதும், எனது ஆச்சிரமங்கள் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார் நித்தியானந்தர். அவர் தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாக அவரது ஊழியர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா ஆய்வாளர் ஒருவருக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியதாக அறிய முடிகிறது.
மேலும் என்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் எனது பக்தர்கள் எனக்கு வழங்கிய அன்பு பரிசில்கள். அவர்கள் போதனைகளால் பலன் பெற்றவர்கள் . அவை அனைத்திற்கும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆச்சிரமத்தில் தங்கி இருப்பவர்கள் சுய விருப்பத்துடனே உள்ளனர். அவர்களை நாங்கள் கட்டாயப் படுத்தி தங்க வைக்கவில்லை எனவும்.
பீடத்தினுள் கிடைத்த சந்தனக்கட்டைகள் திருடர்கள் விட்டுச்சென்றவை. எல்லாவற்றுக்கும் சட்டப்படி ஆவணம் உண்டு. எதையும் நாங்கள் சட்ட விரோதமாக செய்யவில்லை . ஏன் மீடியாக்கள் தமக்கு எதிராக செயற்பட தொடங்கின என்பது தெரியவில்லை இதில் பிண்ணனியில் யார் இருக்குறார்கள் என்பதை ஆதாரம் இல்லாமல் நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை எனவும் நித்தியானந்தர் கூறியுள்ளார். ஆயினும் வீடியோ விவகாரம் பற்றி நித்தியானந்தர் எதுவும் கூறவில்லை எனவும் அறிய முடிகிறது.
மேலும் என்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் எனது பக்தர்கள் எனக்கு வழங்கிய அன்பு பரிசில்கள். அவர்கள் போதனைகளால் பலன் பெற்றவர்கள் . அவை அனைத்திற்கும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆச்சிரமத்தில் தங்கி இருப்பவர்கள் சுய விருப்பத்துடனே உள்ளனர். அவர்களை நாங்கள் கட்டாயப் படுத்தி தங்க வைக்கவில்லை எனவும்.

No comments:
Post a Comment
iya nallatha naalu vaarthai sollitu pongaiya